சென்னை விமான நிலையத்தில் துபாய், ஷார்ஜா பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அமீரக துபாய், ஷார்ஜா மற்றும் மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகளிடம் கடத்தி வரப்பட்டதாக 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட 2.5 கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.87.5 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த தங்கத்தை கடத்தி வந்ததாக 7 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல்: தமிழக ஊடகங்கள்