கொரோனா காரணமாக இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் (scheduled international passenger flights) இயங்க மார்ச் 23 ஆம் தேதியிலிருந்து தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையானது இன்றுடன் (ஜூலை 31) முடிவடையும் நிலையில், இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனரகம் (Directorate General of Civil Aviation) இன்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. அதில், இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை ஆகஸ்டு 31 ஆம் தேதிவரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், DGCA வால் அனுமதிக்கப்பட்ட சர்வதேச சரக்கு விமானங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது எனவும் DGCA வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வந்தே பாரத் திட்டம் தொடருமா?
இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பானது திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையே தவிர, சிறப்பு விமான சேவையான வந்தே பாரத் திட்டத்திற்கு அல்ல. ஆகவே, இந்தியாவிலிருந்து அல்லது இந்தியாவிற்கு இயக்கப்படும் சிறப்பு மற்றும் தனி விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும். அதாவது,
இந்தியாவிலிருந்து அல்லது இந்தியாவிற்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள், சிறப்பு மற்றும் தனி விமானங்கள் இயங்க எந்த தடையும் இல்லை.