நாலு மாடுகளும் ஒரு சிங்கமும்
அழகான கிராமத்தில்
நாலு மாடு இருந்ததாம்
அங்கே இங்கே அலைஞ்சாலும்
நாலும் ஒன்றாய் போனதாம்
அந்த நேரம் பார்த்துதான்
சிங்கம் அங்கே வந்ததாம்
அருகில் வந்த சிங்கமும்
மாட்டை தின்ன பார்த்ததாம்
நாலும் ஒன்றாய் அலைவதால்
மாட்டை பிரிக்கப் பார்த்ததாம்
கொஞ்ச நேரம் பேசியே
சண்டை வர வைத்ததாம்
சண்டை போட்ட மாடது
பிரிந்து தனியே போனதாம்
தனித்தனியே வந்ததால்
சிங்கம் மாட்டை தின்றதாம்